பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் பேருரைகள், அற்புதங்கள், பக்தர்களின் பேரனுபவங்கள் அனைத்தையும் தமிழ் அறிந்த உலகிற்கு தமிழில் வழங்குவதே நோக்கம்.
Sunday, 3 January 2021
ஏன் ஒருவர் மாமிசம் உண்பதை கைவிட வேண்டும்?
ஏன் ஒருவர் மதுபானம் அருந்துவதை விட வேண்டும்?
ஏன் ஒருவர் மதுபானம் அருந்துவதை விட வேண்டும்? | அருளமுத துளி | நவம்பர் 23, 1994
“நாம் நீர் அருந்துகிறோம். நீரில் உயிர் இருக்கிறது. நீரில் சக்தி இருக்கிறது. நீர் தெய்வீகத்தின் ஒரு பொறி! இது சங்கரனின் ஜடாமுடியில் இருந்து உற்பத்தி ஆகிறது. அதனை அருந்தாமல் இருப்பது மிகப்பெரிய தவறு.
போதைவஸ்து மிகவும் தவறானது. அது ஒருவனை தன்னை மறக்கச் செய்யும். அது சுயமரியாதையை இழக்கச் செய்யும். மனித பண்பு மறைந்துவிடும். தெய்வீகம் மறந்துவிடும். அவன் என்ன சொல்கிறான் அல்லது என்ன செய்கிறான் என்பதை அறியான். இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டே இருப்பான். அப்படிப்பட்டவனை பார்ப்பது எவ்வளவு அவமானம்? மனித பிறப்பெடுத்து, எப்படி இவ்வாறு நடந்து கொள்ள முடிகிறது என நாம் கேள்விகளால் அவனை துளைக்க வேண்டும். இது நல்லதல்ல. இதனால் குடும்பங்கள் பாழாகிவிடும். அனைத்து பணத்தையும் மது அருந்துவதிலேயே செலவு செய்கிறான் மேலும் அவனால் அவனது குடும்பத்தை பராமரிக்க இயலாது. இத்தனை செல்வங்களைக் கொண்டு உன் பெற்றோரையும் குடும்பத்தையும் பராமரிக்க இயலவில்லை என்றால் அதனால் பயன் என்ன? இதன் முக்கிய காரணம் என்ன? மது அருந்துவதே!
________
மேற்கண்ட அருளுரையை பகவானின் தெய்வீக குரலில் கேட்க: https://youtu.be/nv696jb1YG0
நன்றி: Sri Sathya Sai Speaks Official, Youtube Channel
ஏன் ஒருவர் புகைபிடிப்பதை கைவிட வேண்டும்?
ஏன் ஒருவர் புகைபிடிப்பதை கைவிட வேண்டும்? | அருளமுத துளி | நவம்பர் 23, 1994
“மதுபானதுடன் சிலர் சிகரெட் புகைக்கின்றனர். புகைபிடிப்பதின் காரணமாக மக்கள் உடல் நலம் குன்றுகின்றனர். புகைபிடிப்பதன் காரணமாக ஆஸ்துமா, ஈஸினோபிலியா (Eosinophilia) மற்றும் இதய குறைபாடுகள் ஏற்படுகிறது. உண்மையில் புகையை உள்ளிழுப்பதால் புற்றுநோய்க்கும் ஆளாகின்றனர்.
இதனை நீங்களே சோதித்து பார்க்கலாம். வெள்ளை துணி ஒன்றினை எடுத்து அதில் புகையினை ஊதிப் பாருங்கள். அந்த வெள்ளை துணியில் கறை படிந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
ஒரு துணியே இவ்வளவு பாதிப்பு அடையும்போது, இரத்த நாளங்கள் அடையும் பாதிப்பை எண்ணி பாருங்கள்.
புகைப்பிடிப்பதால் ஆரோக்கியம் முற்றிலும் போய்விடும், வாழ்நாள் குறைந்துவிடும்."
________
மேற்கண்ட அறிவுரையை பகவானின் தெய்வீக குரலில் கேட்க: https://youtu.be/e0O79-u7gWA
நன்றி: Sri Sathya Sai Speaks Official, Youtube Channel
Saturday, 2 January 2021
தீயதை ஒழிக்க நன்மையை பெருக்கு!
Friday, 20 March 2020
வாகனத்தை பராமரித்தல் - பகவான் பாபாவின் அருளுரை
Wednesday, 27 March 2019
மறக்க வேண்டியவைகளை மறந்து இறைவனை அடையுங்கள்* 🌺
_(அனைத்து இந்திய ஶ்ரீ சத்தியசாயி சேவை நிறுவனங்களின் தலைவா் திரு. நிமிஷ் பாண்ட்யா அவா்கள் பெற்ற நோ்முக பேட்டியிலிருந்து)_
----------------------------------------------------------
எனது தந்தை ஒரு நுண்ணறிவுள்ள வழக்கறிஞராக இருந்தவா். விநோதமான நினைவு ஆற்றல் பெற்றவா். ஒருநாள் பிரசாந்தி மந்திரின் தாழ்வாரத்தில் அமா்ந்திருந்த போது ஸ்வாமி அருகே வந்து ஹே பாண்ட்யா உனக்கு என்ன வேண்டுமென்று வினவினாா். எனது தந்தையோ உண்மையாக எதனையும் விரும்பவில்லை. ஏனெனில் அவரது வாழ்வில் அனைத்தும் பெற்றிருந்தாா். எனவேஅவா் எதனையும் கேட்கவில்லை. ஆயினும் அவா் புத்திசாலித்தனத்துடன்விழிப்புணா்வும் கூடியது இது என அவருள் நினைத்து அவா் கூறினாா். ஸ்வாமி எனக்கு மோக்ஷம் வேண்டுமென.நல்லது என்னுடன் வா உள்ளே செல்லலாம் என ஸ்வாமி கூறினாா்.
இவ்வாறு ஸ்வாமி கூறிய பின்னா் ஸ்வாமி வழிகாட்டிட நோ்முக பேட்டி அறைக்குள் நுழைந்தோம். எனது தந்தை அதீதமான மகிழ்ச்சியுடன் அவருள் எண்ணிணாா். நான் எனது மோக்ஷத்தை நோ்முக பேட்டி அறையினுள் பெறப்போகிறேன் என்று.
ஸ்வாமி அவரை அமரவைத்து என்னிடம் உனது பெயா் கூறு என்றாா்.
எனது தந்தை எங்கு பிறந்தாா்.எனது தந்தையின் தந்தை, அன்னை மற்றும் தந்தையின் மனைவியின் பெயா், மகன்கள் முதலியோா்பற்றி அநேகவிதமான கேள்விகளை கேள்வி மேல் கேள்வியாய் எழுப்பினாா் அதற்கான விடைகளுடன்.100, 200, 300 கேள்விகள்வரை கேட்கப்பட்டன.
அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி தனது நினைவாற்றலின் சக்தியினை எண்ணி தனக்குள் எனது தந்தை பெருமையடைந்தாா். முடிவாக ஸ்வாமி கூறினாா். இத்தனையிலும் உன் மறவாத தன்மை இருக்கும்போது உனது விடுதலையினை எவ்வாறு பெறுவாய்
*"மோக்ஷம் வேண்டுமெனில் உபயோகமற்றதை நீ மறந்திட வேண்டும், உனது மூளையில் உள்ள தேவையற்ற விஷயங்களை மறந்து காலியாக வைத்திருக்க வேண்டும்."*
கடவுள் மிக எளிமையானவா். ஸ்வாமி மிகமிக எளிய அவதாரம் என்று அவர் எங்களிடம் கூறினாா். நீங்கள் இவைகளை மறந்திட முடிந்து இந்த நிமிடங்களில் தடைகள்இன்றி வாழந்திடின் பின்னா் நீங்கள் ஒருமகிழ்ச்சியான நபராக ஆவீா்கள். உங்களது சுமைகளை சுமந்திருப்பின் நீங்கள் ஒரு இறந்த நபருக்கு ஒப்பானவா் ஆவீா்கள்.
(திரு. கிருஷ்ணன்JS அவர்களின் Whatsapp பதிவில் இருந்து)
Friday, 6 November 2015
ஸ்ரீ சத்ய சாயி அருளுரை
Thursday, 8 November 2012
Wednesday, 4 August 2010
இரண்டு வழிகள்
Saturday, 31 July 2010
அமுத மொழி
" மழை நீரானது எரி,குளம்,கிணறு,ஆறு ஆகியவற்றில் விழுகிறது. அது விழும் இடத்தை பொறுத்தும் அந்த கொள்கலனின் தூய்மையைப் பொறுத்தும், அதன் சுவை,நிறம்,பெயர்,எல்லாம் வேறுபடுகின்றன. தெய்வீக கருணையும் மழையைப் போல் தூய்மையாக மிகத் தெளிவாக எல்லோர் மீதும்படுகிறது. அது எப்படி பெறப்பட்டு பயன்படுகிறது என்பது மனிதனின் இதயத்தைப் பொறுத்து இருக்கிறது"
- ஸ்ரீ சத்ய சாயி பாபா
Friday, 30 July 2010
சாயி வாக்கு
Thursday, 29 July 2010
தெய்வத்தின் குரல்
Wednesday, 28 July 2010
தெய்வத்தின் குரல்
" தியானம், பஜன், யோகா இவற்றை விட தன்னலமற்ற சேவையே ஆன்மிக முன்னேற்றத்திற்கு சிறந்த வழி. ஏனெனில் நாம் செய்யும் தியானம்,ஜபம் மற்றும் யோகம் நம் நலனுக்காக மட்டுமே அன்றி பிறரது நன்மைக்காக அல்ல. இவை தனிப்பட்ட ஒருவரின் மகிழ்ச்சிக்காகவும் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவும் செய்யப்படுவன. நாம் பிறர் நலனை விரும்ப வேண்டுமே தவிர சுயநலத்தை மட்டும் விரும்பக்கூடாது"
- பாபா
Saturday, 24 July 2010
தெய்வத்தின் குரல்
Wednesday, 21 July 2010
தெய்வத்தின் குரல்
"யார் ஒருவரும் தன் இயற்கையான குணங்களை விட்டுவிடும் சக்தி கொண்டவர் அல்ல. அது கடவுளின் அருளினாலேயே உண்டாகிறது. அந்த அருளைப் பெற ஜபமும் தியானமும் உதவும். இந்த உண்மையை உணர்ந்தபிறகே அது தன் உணர்வில் இருந்து நழுவாமல் இருக்கும். அதற்கு உதவும் நல் ஒழுக்கங்கள் ஜபமும் தியானமும் ஆகும். இது முதலில் தெளிவாக உணரப்பட வேண்டும். எல்லோராலும் பிரகிருதி அளிக்கும் குணங்களை கட்டுப்படுத்த முடியாது. அந்த சக்தி பிரகிருதியை தங்கள் கைக்குள் அடக்கி வைத்து அவரது கட்டளைக்கு கீழ்ப்படியுமாறு வைத்திருப்போருக்கே கிடைக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் பிரகிருதியே அனைத்திற்கும் ஆதாரம். அதுவே படைத்தல் மற்றும் இருத்தல் ஆகியவற்றின் அடிப்படை. ஆண்கள், பெண்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பயிர்கள் அனைத்தும், அதாவது பார்க்கக்கூடிய யாவையும் பிரகிருதியிடம் இருந்து பிரிக்க முடியாதவை." - பாபா
Tuesday, 22 June 2010
Monday, 4 January 2010
புத்தாண்டு பொன்மொழி
-
சத்குரு நாதன் (காஞ்சி பெரியவர்) பற்றி சத்ய சாயி நாதன் - அமரர். திரு. ரா. கணபதி “காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளிடமே ஈடுபட்டிருந்...
-
Sukshma Baba’s followers are unknowingly Jnanis? Sukshma Baba tells his followers that 'knowingly or unknowingly' they are gyaa...
-
Shining the Light of Truth A comparison of Sri Sathya Sai Baba's teachings to the claims of the Muddenahalli group Introduction...






