ஏன் ஒருவர் புகைபிடிப்பதை கைவிட வேண்டும்? | அருளமுத துளி | நவம்பர் 23, 1994
“மதுபானதுடன் சிலர் சிகரெட் புகைக்கின்றனர். புகைபிடிப்பதின் காரணமாக மக்கள் உடல் நலம் குன்றுகின்றனர். புகைபிடிப்பதன் காரணமாக ஆஸ்துமா, ஈஸினோபிலியா (Eosinophilia) மற்றும் இதய குறைபாடுகள் ஏற்படுகிறது. உண்மையில் புகையை உள்ளிழுப்பதால் புற்றுநோய்க்கும் ஆளாகின்றனர்.
இதனை நீங்களே சோதித்து பார்க்கலாம். வெள்ளை துணி ஒன்றினை எடுத்து அதில் புகையினை ஊதிப் பாருங்கள். அந்த வெள்ளை துணியில் கறை படிந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
ஒரு துணியே இவ்வளவு பாதிப்பு அடையும்போது, இரத்த நாளங்கள் அடையும் பாதிப்பை எண்ணி பாருங்கள்.
புகைப்பிடிப்பதால் ஆரோக்கியம் முற்றிலும் போய்விடும், வாழ்நாள் குறைந்துவிடும்."
________
மேற்கண்ட அறிவுரையை பகவானின் தெய்வீக குரலில் கேட்க: https://youtu.be/e0O79-u7gWA
நன்றி: Sri Sathya Sai Speaks Official, Youtube Channel
No comments:
Post a Comment