Sunday, 3 January 2021

ஏன் ஒருவர் மதுபானம் அருந்துவதை விட வேண்டும்?

ஏன் ஒருவர் மதுபானம் அருந்துவதை விட வேண்டும்? | அருளமுத துளி | நவம்பர் 23, 1994


“நாம் நீர் அருந்துகிறோம். நீரில் உயிர் இருக்கிறது. நீரில் சக்தி இருக்கிறது. நீர் தெய்வீகத்தின் ஒரு பொறி! இது சங்கரனின் ஜடாமுடியில் இருந்து உற்பத்தி ஆகிறது. அதனை அருந்தாமல் இருப்பது மிகப்பெரிய தவறு.

போதைவஸ்து மிகவும் தவறானது. அது ஒருவனை தன்னை மறக்கச் செய்யும். அது சுயமரியாதையை இழக்கச் செய்யும். மனித பண்பு மறைந்துவிடும். தெய்வீகம் மறந்துவிடும். அவன் என்ன சொல்கிறான் அல்லது என்ன செய்கிறான் என்பதை அறியான். இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டே இருப்பான். அப்படிப்பட்டவனை பார்ப்பது எவ்வளவு அவமானம்? மனித பிறப்பெடுத்து, எப்படி இவ்வாறு நடந்து கொள்ள முடிகிறது என நாம் கேள்விகளால் அவனை துளைக்க வேண்டும். இது நல்லதல்ல. இதனால் குடும்பங்கள் பாழாகிவிடும். அனைத்து பணத்தையும் மது அருந்துவதிலேயே செலவு செய்கிறான் மேலும் அவனால் அவனது குடும்பத்தை பராமரிக்க இயலாது. இத்தனை செல்வங்களைக் கொண்டு உன் பெற்றோரையும் குடும்பத்தையும் பராமரிக்க இயலவில்லை என்றால் அதனால் பயன் என்ன? இதன் முக்கிய காரணம் என்ன? மது அருந்துவதே!
________

மேற்கண்ட அருளுரையை பகவானின் தெய்வீக குரலில் கேட்க: https://youtu.be/nv696jb1YG0

நன்றி: Sri Sathya Sai Speaks Official, Youtube Channel

No comments:

Post a Comment