Wednesday, 21 July 2010

தெய்வத்தின் குரல்

"யார் ஒருவரும் தன் இயற்கையான குணங்களை விட்டுவிடும் சக்தி கொண்டவர் அல்ல. அது கடவுளின் அருளினாலேயே உண்டாகிறது. அந்த அருளைப் பெற ஜபமும் தியானமும் உதவும். இந்த உண்மையை உணர்ந்தபிறகே அது தன் உணர்வில் இருந்து நழுவாமல் இருக்கும். அதற்கு உதவும் நல் ஒழுக்கங்கள் ஜபமும் தியானமும் ஆகும். இது முதலில் தெளிவாக உணரப்பட வேண்டும். எல்லோராலும் பிரகிருதி அளிக்கும் குணங்களை கட்டுப்படுத்த முடியாது. அந்த சக்தி பிரகிருதியை தங்கள் கைக்குள் அடக்கி வைத்து அவரது கட்டளைக்கு கீழ்ப்படியுமாறு வைத்திருப்போருக்கே கிடைக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் பிரகிருதியே அனைத்திற்கும் ஆதாரம். அதுவே படைத்தல் மற்றும் இருத்தல் ஆகியவற்றின் அடிப்படை. ஆண்கள், பெண்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பயிர்கள் அனைத்தும், அதாவது பார்க்கக்கூடிய யாவையும் பிரகிருதியிடம் இருந்து பிரிக்க முடியாதவை." - பாபா

No comments:

Post a Comment