Showing posts with label வாஹினி துளிகள். Show all posts
Showing posts with label வாஹினி துளிகள். Show all posts

Thursday, 4 April 2019

செயலின் விளைவு


செயலின் விளைவு! 

"கண்ணன் கீதையில் 'பலனை மறுதலித்து விடு' (மா பலேஷு) என்று சொல்லியிருக்கிறான். அதாவது: காரியம் என்னவோ பலனைக் கொடுக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்தக் காரியத்தைச் செய்பவன் பலனை விரும்பக் கூடாது. அல்லது அந்தப் பலனை கருத்திற்கொண்டு அந்தக் காரியத்தைச் செய்யக்கூடாது. செய்பவனுக்குப் பலனில் அதிகாரம் கிடையாது.. என்று கூறுவது பகவானின் நோக்கமாக இருந்தால் 'பலன்களில் அதிகாரம் இல்லை' (ந பலேஷு) என்று சொல்லியிருப்பான். ஆகையால் செயலிலிருந்து நீ ஒதுங்கி விடுவாயானால் பகவானுடைய கட்டளையை மீறியவனாகி விடுவாய். அது மிகவும் தீங்கை விளைவிக்கும் தவறாகும்.

காரியம் செய்வதற்கு மனிதன் உரிமை பெற்றவனாக இருக்கும் போது, பலனிலும் அவனுக்கு உரிமை இருக்கிறது. இதை ஒருவரும் மறுக்க முடியாது: அவனுடைய உரிமையை மறுக்கவும் முடியாது. ஆனால், அவனுடைய சொந்த விருப்பத்தின் பேரில் சொந்தமாக முடிவெடுத்து அதன் பலனால் எந்த விதமாகவும் பாதிக்கப்படுவதற்கு அவன் மறுக்கலாம். அவை நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, கீதை இங்கு வழி காட்டுகிறது:- “செய்!...விளைவுகளை ஏற்க மறுத்து விடு!” 

நீ செய்கின்ற செயல்களின் லாபங்களை விரும்புதல் ரஜோ குணத்தின் அடையாளமாகும். லாபம் ஒன்றுமில்லையென்பதால் ஒன்றுமே செய்யாமல் இருந்து விடுவது தமோ குணத்தின் அடையாளம். காரியங்களைச் செய்வதில் ஈடுபடுவது, அதனால் விளையும் பலன்கள் என்ன என்று தெரிந்தும் அவற்றில்; பற்றுவைக்காமல் அவற்றைப்பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பது, இவை ஸத்வ குணத்தின் அடையாளமாகும்."

- பகவான் பாபா, (கீதா வாஹினி அத்யாயாம் 5)