"இறை நம்பிக்கை வளர்பதற்கு முதன்மையாக தேவைப்படுவது சத்சங்கம் அல்லது நல்லோரிணக்கம். வேத நூல்கள் சத்சங்கத்தின் மேன்மையை பல உதாரணங்கள் தந்து போற்றி உள்ளனர். ரத்னாகரன் என்ற வழிப்பறி கொள்ளைக்காரன் சப்த ரிஷிகளின் இணக்கத்தால் மனம் மாறி ராமாயண காவியம் படைத்து வால்மீகியானர். இறை சிந்தனையில் ஊறி இருப்போருடன் பழகும் போது பிரார்த்தனையும், நாம ஸ்மரணமும் கைவரப் பெறுகின்றன.அவற்றின் மூலம் இறை நம்பிக்கை வளர்கிறது. பிரார்த்தனை செய்து ஏங்குகின்ற சாதகனுக்கு இறை நம்பிக்கை என்பது ஒரு அறிய வெகுமதியாக கிடைக்க பெறுகிறது"- பகவான் பாபா