Saturday, 31 July 2010

அமுத மொழி

" மழை நீரானது எரி,குளம்,கிணறு,ஆறு ஆகியவற்றில் விழுகிறது. அது விழும் இடத்தை பொறுத்தும் அந்த கொள்கலனின் தூய்மையைப் பொறுத்தும், அதன் சுவை,நிறம்,பெயர்,எல்லாம் வேறுபடுகின்றன. தெய்வீக கருணையும் மழையைப் போல் தூய்மையாக மிகத் தெளிவாக எல்லோர் மீதும்படுகிறது. அது எப்படி பெறப்பட்டு பயன்படுகிறது என்பது மனிதனின் இதயத்தைப் பொறுத்து இருக்கிறது" - ஸ்ரீ சத்ய சாயி பாபா

Friday, 30 July 2010

சாயி வாக்கு

" இறைவனின் அருள் சூரிய ஒளிக்கும், மழைக்கும் சமானம். அதை பெற நீங்கள் சில ஆன்மீக சாதனைகள் செய்ய வேண்டும். பானையை நேராக வைத்தால் தான் மழைநீர் அதற்குள் விழும். அது போல் இதயக்கதவை திறப்பதாகிய ஜபம், தியானம் எனும் ஆன்மீக சாதனையை (பயிற்சியை) செய்து சூரிய ஒளியாகிய இறையருளைப் பெற வேண்டும்" - பாபா

Thursday, 29 July 2010

தெய்வத்தின் குரல்

" அருள் எனும் சூரிய ஒளி உங்களை சுற்றி எப்போதும் உள்ளது. ஆனால் அந்த ஒளியின் பயனைப் பெற, நீங்கள் உங்கள் இதயக் கதவுகளை திறந்து வைத்தே ஆக வேண்டும், இது தான் சுய முயற்சி." - பாபா

Wednesday, 28 July 2010

தெய்வத்தின் குரல்

" தியானம், பஜன், யோகா இவற்றை விட தன்னலமற்ற சேவையே ஆன்மிக முன்னேற்றத்திற்கு சிறந்த வழி. ஏனெனில் நாம் செய்யும் தியானம்,ஜபம் மற்றும் யோகம் நம் நலனுக்காக மட்டுமே அன்றி பிறரது நன்மைக்காக அல்ல. இவை தனிப்பட்ட ஒருவரின் மகிழ்ச்சிக்காகவும் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவும் செய்யப்படுவன. நாம் பிறர் நலனை விரும்ப வேண்டுமே தவிர சுயநலத்தை மட்டும் விரும்பக்கூடாது" - பாபா

Saturday, 24 July 2010

தெய்வத்தின் குரல்

"தீப்பெட்டியில் ஒரே ஒரு குச்சி நாம் ஒளி பெறுவதற்கு போதுமானது, இது போன்றே நாம் ஆன்மீக ஒளி பெற நாம் நன்றாக புரிந்து கொண்ட ஏதாவது ஒரு கொள்கையை அல்லது போதனையை தீவிரமாக பயின்றால் அல்லது நடைமுறைப் படுத்தினாலே போதும்" - பாபா

Wednesday, 21 July 2010

தெய்வத்தின் குரல்

"யார் ஒருவரும் தன் இயற்கையான குணங்களை விட்டுவிடும் சக்தி கொண்டவர் அல்ல. அது கடவுளின் அருளினாலேயே உண்டாகிறது. அந்த அருளைப் பெற ஜபமும் தியானமும் உதவும். இந்த உண்மையை உணர்ந்தபிறகே அது தன் உணர்வில் இருந்து நழுவாமல் இருக்கும். அதற்கு உதவும் நல் ஒழுக்கங்கள் ஜபமும் தியானமும் ஆகும். இது முதலில் தெளிவாக உணரப்பட வேண்டும். எல்லோராலும் பிரகிருதி அளிக்கும் குணங்களை கட்டுப்படுத்த முடியாது. அந்த சக்தி பிரகிருதியை தங்கள் கைக்குள் அடக்கி வைத்து அவரது கட்டளைக்கு கீழ்ப்படியுமாறு வைத்திருப்போருக்கே கிடைக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் பிரகிருதியே அனைத்திற்கும் ஆதாரம். அதுவே படைத்தல் மற்றும் இருத்தல் ஆகியவற்றின் அடிப்படை. ஆண்கள், பெண்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பயிர்கள் அனைத்தும், அதாவது பார்க்கக்கூடிய யாவையும் பிரகிருதியிடம் இருந்து பிரிக்க முடியாதவை." - பாபா

Tuesday, 20 July 2010

85 பஜன் நிகழ்ச்சி

ஓம் ஸ்ரீ சாயி பஜன ப்ரியாய நம: பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 85வது அவதார பெருவிழா கொண்டட்டம் 85 பஜன் நிகழ்ச்சி சாயிராம், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 85 வது அவதார பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வருகின்ற குரு பூர்ணிமா தினத்தன்று (25.7.2010) மதுரை கிழக்கு, ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில் காலை 7.30 மணி முதல் 85 பஜன் பாடல் நிகழ்ச்சி சமிதியில் நடைப்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு பகவான் பாபாவின் பேரருளை பெற அன்புடன் அழைக்கிறோம். என்றும் சாயி சேவையில் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி மதுரை கிழக்கு