சத்ய சாயி பாபாவின் சித்ராவதி லீலைகள்
💦 சத்ய சாய் பாபாவின் சித்ராவதி நாட்கள்(1942-1953)
பகவான் சித்திரவதி நதிக்கரையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் ஒவ்வொரு சாயங்காலமும் பக்தர்களை அழைத்துக்கொண்டு பகவான் சித்ராவதி நதிக்கரைக்கு அழைத்துச் செல்வார். பின்பு பக்தர்களிடமே தான் அமரவேண்டிய இடத்தை காண்பிக்குமாறு கேட்பார். அவர்களோ சுவாமி அங்கு அமரலாம் என்று ஒரு இடத்தை காண்பிப்பார்கள். அவர்கள் காண்பிக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு பஜனைகள் மற்றும் போதனைகளை செய்வார். பின்னர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் என்ன வேண்டும் என்று கேட்பார். ஒருவர், சுவாமி எனக்கு சுடச்சுட ஜிலேபி வேண்டும் என்பார், இன்னொருவரோ, சுவாமி எனக்கு மைசூர்பாக் வேண்டும் என்பார், மற்றொருவர், சுவாமி எனக்கு மசால்தோசை வேண்டும் என்பார்.
அப்படி பக்தர்கள் என்னென்ன கேட்கின்றனரோ அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வரவழைத்து கொடுப்பார். அதுவும் எப்படி? முதலில் பகவான் நதிக்கரையில் உள்ள மணலை சிறு குன்று போல் செய்து கொள்வார். பின்பு அந்த மணல் குன்றுக்குள் கையை உள்ளே நுழைப்பார். பின்பு என்ன... சுடச்சுட நெய் வடியும் ஜிலேபியும், மசால் தோசையையும் ஒரு துளி மண்ணில்லாமல் எடுத்துக் கொடுப்பார்!
அவ்வாறு உண்டவர்கள் நாங்கள் அதுபோன்று ஒரு சுவையை எங்கள் வாழ்நாளிலே ருசித்தது இல்லை என்றனர். அப்படி பகவான் வரவழைத்துக் கொடுக்கும் உணவுகள் மிகவும் சூடாக இருக்கும். அதாவது, அடுப்பில் இருந்து செய்து கொடுத்தால் எந்த சூடு இருக்குமோ அந்த சூட்டில் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு வித்தியாசமான சம்பவம் ஒன்றும் நடந்தது.. சுவாமி ஒரு பெண்மணியை பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அந்த பெண்மணியோ தன் கணவர் இறந்து பல வருடங்கள் (அதாவது பாபா பிறப்பதற்கு முன்பு) ஆகிவிட்டது, அவரின் நினைவாக அவரின் புகைப்படம் என்னிடம் எதுவும் இல்லை அதனால் அவரின் புகைப்படத்தை எனக்கு வரவழைத்து தாருங்கள் என்று கேட்க, பகவான் மண்ணிலிருந்து அவளும் அவர் கணவரும் சேர்ந்து இருக்குமாறு ஒரு புகைப்படத்தை வரவழைத்துக் கொடுத்தார்.
இப்படி ஒரு முறையோ இரு முறையோ அல்ல பலமுறை பகவான் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். இன்றும் கூட சாயி பக்தர்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் அந்த சித்ராவதி நதியின் மணற்பரப்பின் மேல் அமர்ந்துகொண்டு பஜனைகள் செய்கின்றனர். பகவான் நடந்து, அமர்ந்து, சென்ற அந்த இடத்தை ஒரு புண்ணிய இடமாக கருதுகின்றனர்.
(திரு. JS கிருஷ்ணன் அவர்களின் Whatsapp பதிவில் இருந்து)
💦 சத்ய சாய் பாபாவின் சித்ராவதி நாட்கள்(1942-1953)
பகவான் சித்திரவதி நதிக்கரையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் ஒவ்வொரு சாயங்காலமும் பக்தர்களை அழைத்துக்கொண்டு பகவான் சித்ராவதி நதிக்கரைக்கு அழைத்துச் செல்வார். பின்பு பக்தர்களிடமே தான் அமரவேண்டிய இடத்தை காண்பிக்குமாறு கேட்பார். அவர்களோ சுவாமி அங்கு அமரலாம் என்று ஒரு இடத்தை காண்பிப்பார்கள். அவர்கள் காண்பிக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு பஜனைகள் மற்றும் போதனைகளை செய்வார். பின்னர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் என்ன வேண்டும் என்று கேட்பார். ஒருவர், சுவாமி எனக்கு சுடச்சுட ஜிலேபி வேண்டும் என்பார், இன்னொருவரோ, சுவாமி எனக்கு மைசூர்பாக் வேண்டும் என்பார், மற்றொருவர், சுவாமி எனக்கு மசால்தோசை வேண்டும் என்பார்.
அப்படி பக்தர்கள் என்னென்ன கேட்கின்றனரோ அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வரவழைத்து கொடுப்பார். அதுவும் எப்படி? முதலில் பகவான் நதிக்கரையில் உள்ள மணலை சிறு குன்று போல் செய்து கொள்வார். பின்பு அந்த மணல் குன்றுக்குள் கையை உள்ளே நுழைப்பார். பின்பு என்ன... சுடச்சுட நெய் வடியும் ஜிலேபியும், மசால் தோசையையும் ஒரு துளி மண்ணில்லாமல் எடுத்துக் கொடுப்பார்!
அவ்வாறு உண்டவர்கள் நாங்கள் அதுபோன்று ஒரு சுவையை எங்கள் வாழ்நாளிலே ருசித்தது இல்லை என்றனர். அப்படி பகவான் வரவழைத்துக் கொடுக்கும் உணவுகள் மிகவும் சூடாக இருக்கும். அதாவது, அடுப்பில் இருந்து செய்து கொடுத்தால் எந்த சூடு இருக்குமோ அந்த சூட்டில் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு வித்தியாசமான சம்பவம் ஒன்றும் நடந்தது.. சுவாமி ஒரு பெண்மணியை பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அந்த பெண்மணியோ தன் கணவர் இறந்து பல வருடங்கள் (அதாவது பாபா பிறப்பதற்கு முன்பு) ஆகிவிட்டது, அவரின் நினைவாக அவரின் புகைப்படம் என்னிடம் எதுவும் இல்லை அதனால் அவரின் புகைப்படத்தை எனக்கு வரவழைத்து தாருங்கள் என்று கேட்க, பகவான் மண்ணிலிருந்து அவளும் அவர் கணவரும் சேர்ந்து இருக்குமாறு ஒரு புகைப்படத்தை வரவழைத்துக் கொடுத்தார்.
இப்படி ஒரு முறையோ இரு முறையோ அல்ல பலமுறை பகவான் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். இன்றும் கூட சாயி பக்தர்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் அந்த சித்ராவதி நதியின் மணற்பரப்பின் மேல் அமர்ந்துகொண்டு பஜனைகள் செய்கின்றனர். பகவான் நடந்து, அமர்ந்து, சென்ற அந்த இடத்தை ஒரு புண்ணிய இடமாக கருதுகின்றனர்.
(திரு. JS கிருஷ்ணன் அவர்களின் Whatsapp பதிவில் இருந்து)
No comments:
Post a Comment